தோழர் ஜே. ஹேமச்சந்திரன் மிகச் சிறந்த தொழிற்சங்கவாதியாகத் திகழ்ந்தவர். இந்தியத் தொழிற்சங்க மையத்தில் பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியவர்.தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) -இன் முன்னணித் தலைவராகத்திகழ்ந்தார். 1980, 1984, 1989 மற்றும் 2001 ல் திருவட்டாறு தொகுதியில் இருந்து தமிழ்நாட்டின் சட்டசபைக்குதேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் சிபிஐ (எம்) குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.திருவனந்தபுரத்தில் அவரது கல்லூரிப் படிப்புகளின்போதே அரசியலில் தீவிரமாக இருந்தார். 1952 இல் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தார். 1962 ஆம் ஆண்டில் நாகர்கோவிலில் கட்சியின் முழுநேர ஊழியர் ஆனார். தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றினார். 1964 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானபோது அதில் தம்மை இணைத்துக் கொண்டார். இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அமைக்கப்பட்டபோது, அவர்மாநிலத்தில் ஒரு முன்னணித் தலைவராகத் திகழ்ந்தார்.
அவர் தேயிலை, ஜவுளி, தோட்டத் தொழிலாளர்கள், மற்றவர்களுடன் போராட்டங்களை வழிநடத்தினார். அவர் மாவட்ட செயலாளர் மற்றும் சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து திறம்படப் பணியாற்றினார்.அவர் அனைத்து இந்திய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் ஆனார். 1978 ஆம் ஆண்டு சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநிலக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990 களில் அவர் சிஐடியு தமிழ்நாடு மாநிலக் குழுவின் தலைவரானார். அவர் தேசிய ரப்பர் வாரிய உறுப்பினராகவும் இருந்தார். தமிழ்நாட்டில் கோகோ கோலா மற்றும் பெப்சி விற்பனை மீதான தடைக்காக போராடினார். மேலும் 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு, மாநிலத்தில் ஒருங்கிணைந்த நிவாரண பணிக்காக பிரச்சாரம் செய்தார். தனது இறுதிக்காலம் கம்யூனிஸ்ட் லட்சியங்களுக்காகவே வாழ்ந்த அவர் 8 பிப்ரவரி 2008 அன்று திருவனந்தபுரம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு காலமானார்.தொழிற்சங்க இயக்கத்தில் அவரது வரலாறு முக்கியத்துவம் வாய்ந்தது.